<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, August 24, 2006
 
# 223 காலங்கள்
சித்திரை வைகாசி கம்பலம் விரிக்க
இளவேனிற்காலம் இங்கு உதிக்கின்றது
புதிய கண்ணோட்டம் புதிய எதிர்பார்ப்பு
இன்னொரு வருடம் பிறக்கின்றது

ஆனி ஆடி என பெயருக்கு பொருந்தி
பள்ளிச் சிறுவர் ஆடி வர
விடுமுரை வழங்கும் முதுவேனிற்காலம்
இந்த இரண்டாம் பருவம் சிறுவருக்கு

ஆவணி புரட்டாசி நிலப் பசியடங்க
மேகத்தாய் பாலூட்டும் கார்காலம்
வயல்வெளி போற்றும் விவசாயிக்கு

ஐப்பசி கார்த்திகை உடலில் குளிர்ந்து
கண்களில் ஒளிவீசும் குதிர் காலம்
கூடி வாழும் குடும்பத்திற்கு

மார்கழி தை குளிரைக் கூட்டி
மாலைபொழுதை மெல்லினமாக்கும்
முன்பனிக் காலம் காதலருக்கு

மாசி பங்குனி ஆண்டு முடிக்க
வெள்ளிப் பனியாய் விடியும் பின்பனிக் காலம்
முடிவுரை நினைவிற்கும்
எதிர்கால முகவுரைக்கும் பாலமிது
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com