உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, December 07, 2008
# 271 கவிதை வாழும் கண்ணில்
அன்பிற்கு சின்னமாய்
பூத்த பூக்களைக் கிள்ளுவான்
கழுத்தில் ரத்தம் சொட்டுமுன்னே
பொட்டலமாய்க் கட்டுவான்
அவளைக் கண்டு இலகுவதை
பகிரங்கமாய் சொல்லுவான்
எக்கால கட்டமும்
எட்டாது நிற்கும்
கவிஞன் மனது இதைக்
குற்றமென்றெ திட்டும்,
அன்பைக் காட்டுவதில் கூட
அரக்கத்தனம் தேவையா?
உருவங்கள் ஒன்று
வாழும் உலகங்கள் வேறு
கவிஞனின் நெஞ்சில்
தர்மங்கள் வேறு
பூமித்தாயின் சோகத்திற்கு
வானம் சிந்தும் ஆருதல்
பசையில்லா பார்வைக்கு
வெரும் மழையாய் சேர்ந்திடும்
கவிதையில்லா கண்ணுக்கு
அது பறிபோன பட்டம்
கவிதை வாழும் கண்ணில்
அது காற்றில் பூத்த தாமரை
