<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, June 09, 2010
 
# 287 அளவைநூல் மதி
நண்பர் ஈஷ்வர் ரவிகுமாரின் மெட்டிற்கு எழுதிய பாடல் இது.

ஓடமொன்று மெல்ல மெல்ல நதியில் இறங்குது
உள்ளமொன்று மென்று மென்று வலியை முழுங்குது
இந்த ஓடக்கோளே தூரிகை அந்த ஆறு மைக்கூடு
நிறங்கள் மாறி மாறி நதியின் ஆடை நெய்யுது

மனிதனின் மனமுமே நொடியிலே நிறம் மாறும் நதி போலவே
இன்பமும் துன்பமும் *அளவைநூல் மதியின் கையிலே

மரத்தின் வேர்கள் மறைந்த போதும் மணலில் நீரிருக்கும்
காதல் மாலை களைந்த போதும் தோல்வி கழுத்தறுக்கும்
உறவு சொந்தமாயுமே உனக்குரிமை அங்கே ஏதடா
உன் தேவை ஆசை எல்லாம் பிறர்க்கு ஞாயமா?

*அளவைநூல் = logic
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com