<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, August 20, 2008
 
# 266 கைவிரல் காவியம்
கறுப்பு வெள்ளை பளிங்குப் படிகள்
ஒன்றையொன்று ஒட்டி நிற்க
விரல் படை அதில் தடம் பதித்து
ஓடி விளையாடிட
காவியம் படைக்கும் இசை
கண்ணெதிரே பிறந்து
காதுகளில் தவழ்ந்து
நினைவுலகில் வளர்கிறது

இந்த நினைவுக்குழந்தையை
நினைத்த நேரம் அள்ளிக் கொஞ்ச
முடிந்தபோதும்
மேலும் பல இசைக் குழந்தைகளை
இனம் கண்டு நினைவுக்கூடத்தில்
சேர்ப்பதே என் ஓயாத வேட்கை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com