<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, June 08, 2010
 
# 286 அகமருடணம்
பாடல் எழுத இன்னொரு அழைப்பு, இந்த முறை நண்பர், ஷியாம் வய்-இடமிருந்து. பிரயோகத்தில் அதிகம் இல்லாத வார்த்தைகளைத் தேடித் தேடி கொஞ்சம் தூவியிருக்கிறேன். கருத்துக்கள் புதிதில்லையென்றால், சொல்லும் விதமாவது மாற வேண்டும். காதல் தன்னிறக்கப் பாடலில், இனி இதுதான் வழி என்று நினைக்கிறேன்.


கோடைவெயில் வாடி நின்ற தென்னை
தென்றலென்று சேர்ந்திடுமோ என்னை

எதிர்திசை நோக்கி நடைகட்டிப்போக
இதயக்குறி நீ அன்பே

முகம்தான் நிலவோ?
மனம் தேய் பிறையோ?

அடிவினை பொழுதோ?
அகமருடணமோ?

பெளர்ணமி பொங்கும் அலை கண்ணில்
காரிருள் போர்வை எந்தன் நெஞ்சில்

(கோடைவெயில்…

இருவினைதான் இருவரின் உறவு இருமடியாகும் இங்கே
இருநிலம் நீரும் இருநினைவாக இவன் வசிப்பான் இங்கே
ஒரு சில நொடிகள் அதில் பல யுகங்கள் கடத்திடுமே நெஞ்சே

உடையான் என்றோ
உடைமை என்றோ

மோகத்திலே இல்லையோ
யாகத்தைப் போலிதுவோ


மோகராசி விட்டுப் போனதென்று
ஏகராசி வானமெங்கும் இன்று

(கோடைவெயில்…

ஒருசிறைதான் ஒருதலை வழக்கு இவன் மனது இங்கே
ஒருக்காலும் சேரா ஒருவாமையே அவள் ஒலிசை அங்கே

ஒருவன் ஒருத்தி ஒருசேரப் பாதை எதிர்வழி போவதென்ன?

இதுதான் விதியோ?
இதயச் சதியோ?

சுதந்திர லாபம்
சமத்துவ தீங்கோ?

சாத்திரரோகம் இந்த மோகம்
காலப்போக்கில் சிந்தை சுகமாகும்

(கோடைவெயில்…

obscure words:
_____________

*irunilam = big earth
*iruneer = ocean
*iruninaivaaga = broken thoughts
*iruvinai = good and bad
*irumadi = doubling; changing in opposite directions
*adivinai = showing true colors/fading
*agamarudam or agamarudaNam = water immersing ritual to rid of sin
*yaegaraasi= new moon
*orusiRai= one-sided
*oruthalai vazhakku = partial judgment
*oruvaamai = unwavering
*olisai = dowry
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com