உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 13, 2006
# 202 ஓய்வு நாள்
தனித் தீவில் காத்திருக்கிறேன்
தீர்ப்பு நாளை முன்னிட்டு
அந்தப்புரம் அழைத்துச் செல்ல
ஓடக்காரனாய் வருவானோ காலன்?
நன்மை தீமைகளைப் பட்டியலிட்டு
சேரும் ஊரைச் சொல்வானோ?
கடைக் காட்சியாய் கண்களுக்கு
வெண்பனியாகப் புவி மாறி
இக்கரையில் நான் அக்கரை வைத்த
அத்தனை முகங்களும் அலைமோத...
செல்லும் ஊரின் சுக வசதிகளை
சிறிதும் எண்ணுமோ இந்த மனம்?
சொர்க வாசலும் நரகவாசமும்
தொல்லை செய்யாதென் சிந்தனையை
விடைசொல்லிவரும் வாழ்கையில்
நெஞ்சம் நனைத்த நிகழ்வுகளே
நித்திரைச் சுடராய் பவனி வரும்
நினைவின் வாசற்படியில்...
என் வரலாற்றின் ஓய்வு நாள்
ஒப்பந்தத்தில் கையெழுத்தாய்
விடைபெருகிறது என் கடைசிக் காற்று...
அக்கரை என்று ஒன்றிருந்தால்
அனேகமாய் நாம் சந்திப்போம்
Comments:
Post a Comment
