<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 09, 2006
 
# 201 பூங்காவை நீங்காத ரோஜா
பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா

கூந்தலைச் சேரவில்லை
பூஜைக்கும் போகவில்லை
நாரோடு கால் பின்னி மாலையாகவோ
நெருக்கத்தில் மலர்ச்செண்டில் இடம் தேடவோ

இதைத் தவிர எத்தனையோ இருக்கின்றதே
மலருக்கு விதி, வழி, வரைமுறைகள்
அத்தனையும் நான் மறுத்தது ஏன்?
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!

பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா

உன் மேல்சட்டைக் காதோரம் நான் கோர்க்கவே
உன் நெஞ்சத்தின் தாளத்தில் தலைசாய்க்கவே
மண்ணோடு வேரூண்றி நான் வாழ்கிறேன்

இருந்தாலும் எனதாயுள் குறைவு
உன் தோட்டத்து மலரை நீ பார்ப்பதும் அறிது
பறிப்பாயோ நான் அடைவேன் நிறைவு
என் எதிர்காலம்...
உன் இதயத்தின் மேல்!

பூங்காவை நீங்காத ரோஜா
ஏங்காத நாளில்லை ராஜா
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com