<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 09, 2008
 
# 260 பால் மனங்கள்
அப்படி வாய்த்தால் எப்படியிருக்கும்
என்ற சிந்தனை பெண்ணின் மனம்
இதுதான் நிலைமை தற்சமயம்
என்று வாழ்ந்திடும் ஆணின் மனம்

வாய்த்ததற்கும் வேண்டியதற்கும்
உள்ள இடைவெளியை அலசும்
இவள் ஏக்கப் பெருமூச்சை
தன் இயலாமையின் பிரதிபலிப்பாய்
அவன் உணர...

வெவ்வேறு கோணத்திலிருந்து
வாக்குவாதம் வளரும்
கங்கு வளர்க்கும் எரிமலையாய்
இருவரின் காயமும் ஆழமாகும்

உறவின் வரலாற்றில்
இணைந்தவரின் ஒற்றுமைகள் இழைவதென்னவோ
கொஞ்சம்தான்
வாழ்வின் ஒவ்வொரு படியிலும்
எதிர்நோக்கும் கட்டாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள்
ஆணின் வழியோ பெண்ணின் வழியோ
எதுவானாலும் சிரமம்தான்

எடுத்த முடிவின் வெற்றியைவிட
புறக்கணித்த முடிவின் கசப்பு
நீண்ட நாள் நிலைக்கும்
எடுத்த முடிவின் தோல்வியோ
விரிசலை இன்னும் பெரிதாக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
//
எடுத்த முடிவின் வெற்றியைவிட
புறக்கணித்த முடிவின் கசப்பு
நீண்ட நாள் நிலைக்கும்
எடுத்த முடிவின் தோல்வியோ
விரிசலை இன்னும் பெரிதாக்கும்
//
அற்புதமான வரிகள்.
அனுபவத்தின் வெளிப்பாடு.
பாராட்டுக்கள்.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com