<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, December 18, 2007
 
# 252 மனமாற்றம்
பாலாடை போல் சின்ன மேலாடை கொண்டுமே
பளிச்சிடும் தந்தமென உன் உடல் வந்துமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே

பெண்ணே நீ பூவேதான் என்றாலும் சாய்வேனா?
உன் பார்வை காந்தத்திற்கு இரும்பாக ஆவேனா?
தரம் சேர்க்க செய்த கலை நிறம் மாறிப் போகுமே
என் நெஞ்சைக் கொள்ளையிட
இது தேவை இல்லையே

உடல் உருவம் எல்லாம் பிறப்போடு வந்ததே
உடை அணிகலன்கள் ஊர் சொல்லித் தந்ததே
உனைச் சேர்ந்த எத்தனையோ
உடன் மறுத்து வந்தவனை
உயிர் வரைக்கும் நீ என்று
உரைக்க வைத்து வென்றதெது?

உற்சாகத் தேக்கம் உள்ளத்தில் உலைபோல
மத்தாப்பு கிளைகளாய் மின்சாரம் அலைபோல
உடலுக்குள் உருவாகி உயிர்வரை ஊனமாக்கும்
உண்மையை மறைக்காத
புன்னகை வென்றதே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
WOW!
Nice,Mr! very nice!romba romantic aa yerukku,Udhaya!
proud of you!
Vinatha.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com