<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 25, 2006
 
# 196 ஏகாந்தம்
மாலைத் தூறலில் மஞ்சள் நீராடி
சோலை வசந்தத்தில் சிறகுலர்த்தி
மதிற்ச்சுவரில் தத்தி நடந்து
மாடத்தில் குளிர்காயும் வெண்புறாவே...

உன் அன்றாட வாழ்வின் ஏகாந்தம்
என் வாழ்வின் உச்சத்தில் கூட இல்லையே?
...யோசித்தேன்

உடைந்திருக்கும் கிளைகளைக்கூட நீ
ஒருங்கினைத்து கூடு செய்தாய்
இயற்கையிடம் உனக்கிருக்கும் உறவே உயர்வு
உன்னையும் குறிபார்க்கும் உள்ளத்தார் நாங்கள்
ஏகாந்தம் எங்களை விட்டு
எட்டியே இருக்கட்டும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com