<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, June 27, 2006
 
# 211 காக்கைக் கடி
எதிர்கால நண்மை என்று
எத்தனை படுத்துகிறாய்?
மருந்தளவு சிறிதேனும்
கொடுத்தாயா முன்பணமாய்?
சொர்கமென்ற மாயலோகம்
இருக்குமா சொன்னபடி?

வரவிருக்கும் திரைப்படங்களை
காட்டிடும் விளம்பரப் படம்போல்
சொர்கத்தின் முன்கதை சுருக்கம்
ஓட்டிவிடேன் சில நிமிடம்?

யாரை நம்பி இருப்பது
ஆசைகளை மறுத்தபடி?
கேட்பது நியாயம்தானே
கிடைக்குமா காக்கைக் கடி?

சந்தித்த இண்ணல்கள் அத்தனையும் ஈடாக்கி
நன்நடத்தை பொருமைக்காக இன்னும் கொஞ்சம் மதிப்பெண் கூட்டி
கொடுப்பாயா சொர்கத்தில்?

அனுபவிக்க நினைத்திருக்கும் இன்பங்கள் எத்தனையோ
பாவத்தின் பட்டியலிலும் பாதிக்குமேல் இடம்பெருமே
அனுமதிப்பாயா ஆண்டவா?

பரிசு தெரியாது நம்பியே
பரிட்சை எழுதாதென் நெஞ்சமே

ஆலயம், மடமாட்டம் சொர்கமும் இருந்துவிட்டால்
பொருக்காது என் மனது
இப்பொழுதே சொல்லிவிட்டேன்
அப்படித்தான் இருக்கும் என்றால்
இப்பொழுதே சொல்லிவிடு
செலவிலோ மலிவிலோ
நான் நினைத்த சொர்கத்தை
சஞ்சலமேதுமின்றி
பூமியிலாவது பார்க்கவிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
What a great site » » »
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com