<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 27, 2006
 
# 205 மெய் ஞாயிறு
வகுப்பறையில் நீ பிந்திடலாம்
வாய்ப்புகள் உனை விட்டுச் சென்றிடலாம்
பாசாங்குப் பெண்கள் கைவிடலாம்
உன்னை பாராட்டும் பெற்றோரும் சோர்ந்திடலாம்

வட்டாரத்தில் நீ வெத்துச் சீட்டு
விதி மேலே உன் குற்றச்சாட்டு

ஏண்டா சோகம் பித்துக்குலி?
என் நேசக் கடலிலே முத்துக்குளி
எதிர்காலம் நீ சொன்னபடி
எதிர்ப்பு வந்தா அது எந்தன் குறி

இன்றைக்கு உன் வித்தை செல்லாக் காசு
தோல்வியால் அனுபவ முலாம் பூசு
விதி விளக்கமில்லாமல் வாழ்த்துக்கூறும்
இல்லை இறக்கமில்லாமல் வீழ்த்திப்போகும்
என்றைக்கும் நீ மட்டும் நீயா இரு
நம்பிக்கைச் சுடர்தான் மெய் ஞாயிறு

இதை தைரியமா நீ தக்கவெச்சுக்கோ
மனம் தொய்வடைஞ்சா அதை நிக்க வெச்சுக்கோ

ஏண்டா சோகம் பித்துக்குலி?
என் நேசக் கடலிலே முத்துக்குளி
எதிர்காலம் நீ சொன்னபடி
எதிர்ப்பு வந்தா அது எந்தன் குறி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com