<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, May 17, 2006
 
# 204 இன்று முதல் இறந்தகாலம்
என் தோள்மீது அம்பாரி தேடிய ராணி
என் முதுகேறி முத்தாடி வந்தவளா நீ?
நான் பாசத்தில் சுமந்த பால் காவடி
இன்று வேறொருவன் தேரிலே போவதென்னடி?

பிறை நிலா பெளர்ணமி ஆகும் தர்மமோ?
இங்கு மருதானி மஞ்சலுடன் சேர வந்ததோ?

ஏற்றுக்கொள்ள முடியாமல் தேற்றிக்கொள்கிறேன்
தந்தை என்றால் கண்டிப்பென சொல்லியது வீணடி
யார் தாலாட்டித் தூங்கவைத்தார் கேளடி
ராஜாத்தி கேளடி

தோட்டக்காரன் சொந்தமெல்லாம் வாடகைதானே?
மலர்ந்துவிட்ட பின்னே மலர் சூடிடத்தானே?

தாழ்வாரம் திண்ணையென சுமந்து
சோறூட்டி சொன்ன கதை ஆயிரம்
பார்த்துப் பார்த்து உன்னைப் பாதுகாத்து
வழிகாட்டி வந்தது யார் காரியம்?

ஒரு சடங்கில் பந்தம் கை மாறுவாய்
விந்தையடி ராஜாத்தி விந்தையடி
உன் எதிர்காலம் இன்புற வாழ்த்திவிட்டு
இறந்தகாலம் ஆகிறான் உன் தந்தையடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com