<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 16, 2006
 
# 203 மத்தாப்பு சுந்தரி
பரிகாசப் பேச்சு சத்தம் அதைக்கேட்டு பொழுதாச்சு
படித்துறையும் பாதக் கொலுசை பாக்காமே சூடாச்சு

ராத்தூக்கம் நான் கண்டு மாசக்கணக்காச்சு
வேலை வெட்டி செஞ்சாலும் அவ நெனைப்பே பொழப்பாச்சு
பரிட்சைக்குப் படிக்கும்போது குறிவெச்சு உதிக்கிறா
ஒழுங்கா பாங்கா இல்லாம விவகாரமா சிரிக்கிறா

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி

அழகுன்னு பாக்கப்போனா எத்தனையோ குறையிருக்கும்
அடுத்தவங்க குறையா நெனைக்கும் அம்சமெல்லாம் எனை உறுக்கும்

பேருந்து கைப்பிடி கணக்கா ரெண்டு பக்கம் பின்னியிருப்பா
செம்பட்டைத் தலைமுடிக்கேத்த கனகாம்பரம் சூடியிருப்பா
புளியம்பூ நெறத்தில இடுப்போரத் தோள் பையும்
கண்ணைப் பறிக்கிறாப்புல தாவனி ரவிக்கையும்...

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com