உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 04, 2006
# 199 அமுதகானம்
புகைந்து கொண்டிருக்கும் இனம்புரியா ஏக்கங்களை
அங்கீகரித்து அலசிட
சோக முனகலாய் சாரங்கி...
முடிவில்லா தொடக்கமாய்
காலத்தைக் கட்டிப் போட்டு
நிற்கவா நடக்கவா என்ற தீர்மானம் தேவையின்றி
நிலைகளைப் பொய்த்தபடி
தடம் பதிக்கும் தபேலா...
இவை மத்தியில் மூச்சுக் காற்றை
உயிர்குழாய்களில் வழியவிட்டு
சாதகப் புயலில் சூடுசெய்து
எண்ணி முடியாத கட்டைகளில் பண்டிதன்
பாடல் வரிகளாய் பதம்பார்த்து
அசைபோட்டுப் பரிசீலித்து அரவனைத்து
புடம்போட்டுப் படியேற்றி
அனுப்பி விடும் அமுதகானமே
கசல் பாடல்
Comments:
Post a Comment