<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, May 01, 2006
 
# 198 தமிழுக்கொரு கண்ணகி
மந்தமாருதமெல்லாம் மந்தமாகக் காரணம்
சந்தமிங்கு செத்துப்போனதே
கட்டும் தமிழ் கவிதை
மெட்டுக்கென்ற நிலையில்
சொற்சுவையும் குட்டுப்பட்டதே

மெல்லினத்தில் இருந்தால் பாடுவது சுலபம்
சாக்கு சொல்லி பொட்டழிக்கிறான்
தமிழை
மெட்டுக்காரன் பொட்டழிக்கிறான்

பொருள் நீங்கி விதவை ஆகிவிட்ட பிறகு
வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
இசைக்கென வார்த்தைகளைக் கற்பழிக்கிறான்
உடந்தை பாடகனும் சேர்ந்திருக்கிறான்

வெட்கம்கெட்ட ரசிகன்
கப்பம் கட்டிக் கேட்பதால்
செவிகளில் காறி உமிழ்வார்
தமிழரின்
செவிகளில் காறி உமிழ்வார்

துரோகிகளை சுட்டெறிக்க
தமிழுக்கொரு கண்ணகி
சிலம்பெடுக்கப்போவதில்லையா?
கற்பு பெண்ணுக்குண்டு
தமிழுக்கில்லையா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
I have been looking for sites like this for a long time. Thank you!
» » »
 
You have an outstanding good and well structured site. I enjoyed browsing through it Discover credit card access online foam mattress topper bobble head air freshener buy ultram pills medicine+ultram Lisa interracial My fioricet slurpconfirm404 htm
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com