<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 17, 2006
 
# 194 வசியக்காரி பதில் பாட்டு
கோதை பாத்த போதையிலே
தோகை விரிக்கும் ஆண்மயிலே
சோளக் காட்டை சுத்தி சுத்தி நடக்குறியா?
மனுசா...
ஆவிப் புகையா அலைவது ஏன்?
அம்புலி முகத்தை அனுகுவதேன்?

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

பாசத்தோட விசமம் கலந்து
பரிமாரும் குணந்தான் உனது
சொல்லிப் பாத்தும் கேக்கலையா என் உசிரே?
உசிரே...
கோலம் போட்டும் வாசல் மூடிக் கெடக்கனுமா?
வெளக்கு ஏத்தி வைக்காமே
மனசு எரிஞ்சா உன் பாடு

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சேத்து வெச்ச காசையெல்லாம்
செலவழிச்சு ஊதாதே
பாக்குவெச்சு பரிசம் போட வேணாமா?
வாலிபா
தாங்கத் தாங்க தலைக்குமேல ஏறுவியே
சாவிக் கொத்தா சினுங்கிக்கோ
பூட்டு தெறக்க முடியாது

வெள்ளைக்காரி நான் இல்ல
வாய்க்கு ருசியா தரச் சொல்ல

சங்கு கழுத்தை நெனைச்சுபுட்டா
கங்கு தெறிக்கிற கரித்துண்டா
நெஞ்சு கொதிப்பது நெசமானா
வாரியா?
வண்டிமாட்டை ஓட்டிகிட்டு
வாடிப்பட்டி பொண்ணெடுக்க

வசியக்காரி வருவேனே
வாக்கப்பட்டா தருவேனே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
வசியக்காரி வருவேனே
வாக்கப்பட்டா தருவேனே!

Ennudaiya manam kavarndha varigal! Udaya Sir, dhool!

Nalini.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com