உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, January 04, 2006
# 183 ஆயுள்
அந்த வானின் வயதைக் கேட்டேன்
பதில் காற்றில் வந்தது
எனைக் கேலி செய்வது போல
கேள்வி மீண்டும் ஒலித்தது
இந்தப் பூவின் வயதைக் கேட்டேன்
அதன் வாசம் வந்தது
இந்த வாசம் போன பின்னே
ஏது வாழ்க்கை என்றதோ?
அந்த நதியின் ஆயுள் என்ன?
என்ற கேள்வி கேட்டதும்
அது கரையை நோக்கிப் பாய்ந்து
நிலப் பசியைக் குறித்தது
இந்த பூமியின் ஆயுள் என்ன?
நான் பயந்து கேட்டதும்
என் கையில் புழுதி ஏற்றி
அது நம் கையில் என்றது
Comments:
Post a Comment
