<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, November 05, 2005
 
# 180 நித்திரையின் நிழல்
சூராவளி சூரையாடும்
ஒரு பக்கம்
வெள்ளம் கொல்லும்
ஒரு பக்கம்
அனுதாபம் அஞ்சலில்
அதர்மம் தந்தியில்

நித்திரையின் நிழல் நாங்கள்
நட்சத்திரங்களும் நகைக்கும்
எங்கள் பாட்டை
நிலவும் காட்டும்
புறமுதுகை

எங்கள் வருகையைப் பார்த்து
விடியலும் பின் தங்கும்
ஈர விழிகளைப் பார்த்து
முகிலும் காயும்
மின்னல் எக்களிக்கும்
இடி கொக்கரிக்கும்

முறையிடப் போன கோவிலில்
மணியில்லை
குறைகளைக் கொட்டிட
வானவெளியில்கூட இடமில்லை

இயற்கை அல்ல
ஏளனத்தின் குழந்தைகள்
நாங்கள்
எச்சரிக்கையின்றி தாக்கும்
பிணப் பிச்சைக்காரியின் பெயர்
இயற்கை அன்னையாம்!
வெட்கக்கேடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
Udhaya
Arumai

We are powerless before mother natures fury.

I am going to blogroll you.

PS-:Remember UV from tfmpage ;)
 
UV,
Thanks for reading and sharing your comment. Yes, I remember UV certainly. If you just said Ganesh, I wouldn't have had a clue.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com