<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, November 04, 2005
 
# 179 தீக்குளிப்பு
விலகாதோ மேகம்
மிளிராதோ வானம்
விடிவில்லை விறகைக் கொடு

புலராதோ பாதை
எரிந்தாளே சீதை
எமனே உன் ஆட்சி விடு

பூ முடிந்தவள்
தீக் குளிக்கிறாள்
இதைப் பார்த்தா நானும் வாழ்கிறேன்?

புத்தனும் எதிர்பார்க்காத ஞானம்
சென்றவரின் நினைவில் கூடும்
தத்துவங்கள் இழப்பின் விருதுகள்

விரைந்தோடும் வாழ்வின்
வேகத்தில் கறையும் என்று
துக்கத்தை தோளிலேற்றினேன்
பாரத்தில் நான் மூழ்கவா?
காலத்தால் சுமை இலகவா?

முடிவுக்கோட்டில் கேட்டால்
தேர்ந்தது யார் தெரியும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com