<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, October 31, 2005
 
# 178 கேளடா கேசவா
கேளடா
கேசவா
கூடலில் உன்வழி போகவா?

நீ செய்தால்
லீலையா
நான் அதை செய்வதால் பாவியா?

கேளடா...

நானுமே ராமனாய்
வாழவே பார்க்கிறேன் தோல்வியே
சீதையைத் தேடையில்
கோகுலம் தூண்டிட நோகிறேன்

நன்னெறிப் போர்வையில்
ராமன் ஆனாய்
ஆசைப்பெண் இணங்க
கண்ணன் ஆனாய்

உனக்கென்னய்யா
நீ உருமாறூவாஇ
எனக்கில்லையே
சுக அவதாரங்கள்
சுக நிலை இங்கு நான் கான...வழி சொல்லுவாய்

(கேளடா...

நெஞ்சிலே நேர்ந்திடும்
சஞ்சலம் யார்செயல் கூறடா
ஆசையை கூட்டினாய்
மயங்கினால் முறைகெடலாகுமா?

இரு பட்சிக்கா
இந்த உறவுக் கூடு?
பிறர் சம்மதம்
கொண்டு இணைந்தால் போச்சு?
ஆசைக் கடலுக்கு பங்காளி பலராகுமே!

(கேளடா...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
கேளடா
கேசவா
கூடலில் உன்வழி போகவா?

நீ செய்தால்
லீலையா
நான் அதை செய்வதால் பாவியா?

கேளடா...

Very fair question to Kesavan! Romba azhagaaa..irrukku. I should say this is very impressive. (Sir, ticket vaangi tharen India kku. Kilambunga...)

Nalini.
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com