உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, October 19, 2005
# 176 அன்பே...
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...
ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...
சுழலும் காற்றோடு
அசையும் நாற்றாக
உடலும் ஆடத்தான்
மனதும் கூடத்தான்
இன்ப எல்லைகள்
இன்று மீறத்தான்
கொஞ்ச நேரம்தான்
துன்பம் தூரம்தான்
சொந்தம் ஆவாயோ?
சோர்ந்து போவாயோ?
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
இடை இணைந்தோமே?
அன்பே...
பன்பாடு நாளும் மாறுதே
முகவுரை அன்று மண நாளிலே
அறிமுகம் இன்று முடிவுரை ஆனதே
ஏன் அன்பே?
சந்தித்தோம் இன்ப ஊரிலே
நேசித்தோம் ஆடல் பேரிலே
விடைபெறுவோம் தனிமைத் தீவிலே
ஏன் அன்பே?
எம்மனதை யார்தான் சேரவோ?
யார் துயிலை யார்தான் போக்கவோ?
அசைந்தாடும் உடல்கள் மத்தியில்
அசைபோட்டேன் சுருங்கும் நெற்றியில்
எப்பாதை விரிந்த போதிலும்
இக்கோதை எந்தன் விழிகளில்
தப்பாமல் இருக்கப் போகிறாள்
சொன்னேன்
எழுதி வை
இன்றே
எழுதி வை
இன்ப கூடம்தான்
இரவு நேரம்தான்
கண்கள் கோர்த்தோமே?
அன்பே...
ஆடி வா என்று
தாளம் கேட்காதோ?
கால்கள் பேசாதோ?
அன்பே...
Comments:
Post a Comment