உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, November 16, 2004
# 164 உரை நீங்கி வீணை
உரை நீங்கி வீணை
மொழி பேசும் வேளை
கேட்காமல் உணர்வேன் இல்லாத சொல்லை
குறை சொல்லவில்லை தொடுக்காத வில்லை
துளை கொண்ட நெஞ்சு குறி பார்க்கும் உன்னை
செவி பார்த்தா செல்லும் இசையும்?
திசை பார்த்தா தென்றல் அசையும்?
வாசகனை நினைத்தா கசியும்
வாசிக்கும் வார்த்தை ருசியும்?
பூக்களின் வாசமே வீசுமே என்றும் இலவசம்
சுடுகாட்டிலும் பூக்கள் மலரும்
சோலையிலும் களைப்புல் விளையும்
காதலெனும் காந்த சக்தி
முறைகளுக்கு முறன்படும் யுத்தி
எழுதாத நூலிலே என்றுமே எல்லைகள் இல்லை
Comments:
Post a Comment