<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, August 10, 2004
 
# 162 கடந்த கால காட்சிகள்
கடந்த கால காட்சிகள்
நினைவரங்கிலே
பிறந்த ஊரின் சூழலில்
உணர்ச்சி பொங்குமே

திரும்பி பார்க்கவோ?
கலைத்து நீக்கவோ?

நினைத்தால்...இங்கு உரைந்து கிடக்கும் பருவ ராகம் ஓலமாகுமோ?

(கடந்த...

நாரை தேடும் மீன்கள்போல் ஏக்கங்கள்
ஆக்கத் தேவை பூர்த்தியால் அழிவுகள்

இந்த நிலை தேடியா பாதை மறுத்தேன்?
பந்தக் கடன் தீர்க்கப்போய் நேசம் முறித்தேன்?

வெகு நாள் மனமுகில் மோடம் போட்டுவிட்டு
நனையும் இன்று உண்மை வெட்கம்கெட்டு

முதலாம் மோகம் பதியும்
அது இதயம் நீங்கா தடயம்
அந்த பிஞ்சுக் காதலின் நெஞ்சத் தூய்மை ஏதினி?
கொண்ட சொந்த பந்தமே எதிர்பார்ப்பில்தான் இனி

திருக்கோவில் தெருவில், வீதி முனையில்,
ஆற்றங்கரையில், தோப்புக்கருகில்,
படர்ந்திருக்கும் பனியென
அவளை நினைவூட்டும் சின்னங்கள்

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com