# 158 இருட்டு வேளையில் (aka The Cart Song)
பாடல் தலைப்பை அழுத்தினால், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்தின் இணையத் தளத்தில் இந்தப் பாடலின் இசை வடிவம் அடங்கிய பகுதிக்கு கொண்டு செல்லும்!
இருட்டு வேளையில் கறுப்பு சாலையில் வெண்மதி ஓடுதுங்க*
அந்த முறட்டு சூரியன் முறைப்பதைக் கண்டு முகத்தை மூடுதுங்க*
வயக்காடு கெழக்கால வழிப் பாதை மேற்க்கால
எட்டுத் திக்கும் தேடி உன்னை காணலியே
நான் வீடு செல்லுமுன்னே கதிர் மேற்கே மறையுமடி
வெளிச்சமா உன் சிரிப்பு போதுமே
ஊரறிஞ்ச உண்மை என் உறவு காத்த பெண்மை
மனம் திண்டாடுது உன் இடுப்பில
அந்த சேவல் கொண்டை சிலிர்ப்பில
(இருட்டு...
ஓய்வெடுங்க காளைகலே
இன்னும் கொஞ்ச தூரமே
நடுரோட்ட மூடிப்புட்டான்
ரயில் வரும் நேரமே
தோப்புக்குள்ள தனிமரமா
நான் திரிஞ்சேன் நேத்து
பள்ளத்துல வெள்ளம் போல்
நிறைஞ்ச கை சேர்த்து
பசுமை சூழ்ந்திருக்கு பருவம் கண்டிருக்கு
வைக்கோல் வண்டியிலே என் வைரம் வீற்றிருக்கு
படபடக்குதடி பறந்துவிட
என் பிஞ்சு மனசுக்கு இரக்கையில்ல
(இருட்டு...
ஓட்டமிடு காளைகளே
இன்னும் கொஞ்ச தூரமே
ரயில் வந்து போயிடுச்சு
இன்னும் கொஞ்ச நேரமே
மலை உச்சி நனைந்ததடி
கார்முகிலின் தூறலில்
தலை துவட்ட அனுப்புதடி
வெண்முகிலை வானமே
தலையனை புறக்கனித்து
மடியினில் இடம் கொடடி
வருடிடும் விரல் நுனிகள்
நினைவுக்கு வருகிறதே
உடல் சிலிர்க்குதடி நினைப்பதற்கே
என் கனவுகளை நீ கலந்திருக்கே
(இருட்டு...
*இந்த வரிகளை எடுத்துக் கொடுத்தவர் நண்பர் ரங்கா அவர்கள்
