உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, June 08, 2004
# 157 அரிதார விண்மீண்கள்
அந்நாந்து பார்க்க அரிதார விண்மீண்கள்
நிகழும் கனவாக நிழலாடும் தேவதைகள்
கனவுக் கன்னியாக்கி காதலிக்கும் காளையரும்
கதாநாயகிக்காக கண்ணீர் சிந்தும் மாந்தர்களும்
கலைமாதின் திறமையை புகழாத நாளில்லை
கற்பென்ற தகுதியைப் பேசாத வரையிலே
கடுகளவும் யோசியாது குற்றங்கள் சாட்டுகிறோம்
கலைஞரின் பன்பாட்டை விலைபேசிக் குறைகிறோம்
நமக்கு எட்டாமல் போனவர்மேல் பிழையா?
நம் வாழ்வில் இல்லாத சுகத்தின் குறையா?
உயர்ந்து விட்டோரை தாழ்த்தினால்
நாம் உயர்ந்துவிட்ட பிரம்மையோ?
முன்னேற்ற விலை கற்பு என்றால்
நாம் முன்னேறத் தேவையில்லையோ?
Comments:
This is very interesting site... Tire chains cables Bmw auto front fender replace Pay bills online ebills boating quiz
Post a Comment
