<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 153 மதியானப் போது
மதியானப் போது
கடும் கோடை நேற்று
உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று

என் பார்வைச் சூட்டில்
உன் தேகம் இளக

கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?

(மதியானப்...

இருபது ரோஜா இதழ்களை கோர்த்தால்
இடையிலே மின்னும் முத்தாரம் சேர்த்தால்
அதுகூட இல்லை புன்னகைக்கு ஈடாய்
உனைத்தேடி நானும் படுகிறேன் பாடாய்

உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று

கண்மூடித் திறந்தேன்
நீ போனதெங்கே?

பகலோடு ராவும் செய்கின்ற பேரம்
பொழுசாயும் நேரம் உன் கன்னமாகும்
கனுக்காலின் மேலே உறவாடத்தானே
கொலுசோடு மணியும் கைகோர்த்து சினுங்கும்

உனைக் கண்ட நெஞ்சம்
குளிர் வாடைக் காற்று
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com