உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
# 151 நாடோடிக் கலைஞன்
நாடோடிக் கலைஞன் நானே
நாளும் வலம்வருவேனே
பொதிசுமக்கும் வண்டிமேலே
பயணங்கள் இலவசம்
அரசன்போல ஆசனம்
அசுரவேக அம்பாரி
தென்றல் வந்து முடிகலைக்கும்
கைகுலுக்கும் மரக்கிளையும்
மாநிலங்கள் பல கடந்தும்
பிறந்த மண்ணின் கலை மணக்கும்
அடையும் ஊரில் ரசிகர் கிடைத்தா
பாட்டுக் கூத்து பொறி தெறிக்கும்
திருவிழாக்காலம் வந்தா
தெருவெல்லாம் கலையரங்கம்
(நாடோடிக்...
வானம் எனக்கு கூடாரம்
கலை கொடுக்கும் ஆகாரம்
காற்று கொடுக்கும் விளம்பரம்
விசில் எனக்கு விமர்சனம்
எல்லையில்லா வீடெனது
தொல்லையில்லா பாடெனது
கூட்டம் களைஞ்சா வேறூரு
தூங்கும் நேரம் போய் சேரு
Comments:
Post a Comment
