<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 150 தேவை
களங்கமில்லா வானமாய்
அவளிருந்தால் போதுமே
கண்கவரும் கீழ்வானின்
அழகெல்லாம் தேவையில்லை

குயில் போன்ற குரல் வேண்டாம்
அழைத்தவுடன் வர வேண்டாம்
தன் மனதை தெளிவாக
அவள் உரைத்தால் போதுமே

வெளியுலகில் பறந்தாலும்
இல்லறமாய் இருந்தாலும்
அவள் திறமை எதில் இருக்கோ
அதைச் செய்தால் போதுமே

என் தேவை இத்தனையே
குறைந்தாலும் ஏற்றிடுவேன்
அவள் தேவை நான் என்றால்
என் தேவையை உதறிடுவேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com