உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
# 148 முற்றுகை இட்டது வானமடி
முற்றுகை இட்டது வானமடி
மூழ்கிடும் நிலையில் பூமியடி
சுற்று வட்டமும் சுவரெழுப்பி நான்
காத்து வந்தது காணலடி
(முற்றுகை...
இதைத்தான் காதல் என்று சொன்னார்
இழந்தால் சாதல் என்று சொன்னார்
விதைத்தால் சொந்தம் என்று சொன்னார்
துறந்தால் மோட்சம் என்று சொன்னார்
மலர்ந்த கண்கள் சொன்னது பொய் என்றான பின்
உண்மையே பேதமடி
தோல்வியில் கண்டேன் வெற்று நிலை
வெற்றியென கண்டாய் வேறொரு கை
வெற்றிடம் என்பது உச்சியடி
பற்றுதல் கொண்டது பூமியடி
விலைக்கு பேரம் போனதுன் காதல் அல்ல
உண்மை உண்மையடி
(முற்றுகை...
Comments:
Post a Comment
