<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 147 கேள்வி பதில்
ஆண்: ஒரு வரியில் பெளர்ணமியைப் பாடு பார்க்கலாம்

பெண்: இரு வார்த்தை போதுமே, "நிலவின் விசுவரூபம்"

ஆண்: விரசமென்பது?

பெண்: கற்பனையின் கற்பு விற்பனை

ஆண்: ஊடலென்பது?

பெண்: கூடலின் முகவுரை

ஆண்: நாணமென்பது?

பெண்: அடைகாத்த ஆசைகள் அம்பலமாவது

ஆண்: நட்பு?

பெண்: கடன்படுத்தாத சொந்தம், மன்னிக்கும் மனசாட்சி

ஆண்: களவு?

பெண்: பற்றாக்குறையின் பலவீனம், ஏற்ற தாழ்வின் விமர்சனம்

ஆண்: கற்பு?

பெண்: ஆண் ஆதிக்கக் கோட்பாடு

ஆண்: காதல்?

பெண்: ஈர்ப்பின் இலக்கணம், கவிதையின் உயிர்நாடி

ஆண்: திருமணம்?

பெண்: சமுதாய தற்காப்பு சாதனம், இனவிருக்தி ஆயுதம்

ஆண்: பிறப்பு?

பெண்: இயற்கையின் அன்பளிப்பு

ஆண்: வாழ்கை?

பெண்: நிர்ணயத்தின் நிழலாட்டம்

ஆண்: மரணம்?

பெண்: காலச்சுவடின் கடைசிப்படி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com