<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 146 முறையீடு
அல்லா...
ஆவியாகும் முன்
அல்லாவிடம் ஒரு கேள்வி

முக்காடும் முகத்துணியும்
என் கைரேகை ஆனதென்ன?
முகமுடியும் முகமூடியும்
கனவானை கயவனாக்குமோ?

என் முகம் இனி மறைமுகம்
என் அணி என் பின்னனி

உனக்கு மண்டியிட்டேன்
அது குற்றமானது
அதற்கும் மண்டியிட்டேன்
அது துக்கமானது
வானைப் பார்த்து முறையிட்டேன்
எதிரொலியாய் மரண ஓலம்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com