<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 145 வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
மலர் மண்ணோடு வாழ்ந்தால்
முடிசூடல் எப்போது?
உரையோடு வாள் போல
எழுதுகோல் தாள் போல
உறவாட இப்போது...

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

சிந்தை யாவும் செந்தீயில் வேகும்
மந்தை போல உன் பின்னே போகும்
பொங்கிப் பெருகிப் படரும் பிரவாகம்

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

மலருக்கு பன்னீர்
வேருக்கு வெண்ணீர்
முன்னுக்கு முறனாய்
ஏனின்னும் கண்ணீர்?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு

மூடமை தீர
முறையீடு ஏற்ப்பாய்
சாதகமாக
ஒரு பார்வை பூப்பாய்

கட்டிக்காக்க காரணம் ஏது
கொண்டவன் நான் என்று கை சேர்ந்த போது?

வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
வெட்கத் தாழ்பாளைத் திறந்துவிடு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com