<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, May 08, 2004
 
# 143 தெரு ஓரத்திலே
தெரு ஓரத்திலே
ஒரு ஈர இரவினை நோக்கி
நடந்தேன்
உன் நினைவுதான்
நிழல் போல் தொடர்கிறது
சாலை முழுதும் மனிதர்கள் இருந்தும்
நீ இல்லாது தனிமைதான் நிலைக்கிறது

உணர்வது நாடல் என்பேன்
உதித்தது பாடல் என்பேன்
உனை எண்ணி பல முறை நான்
உறங்காது விழித்திருப்பேன்

நாளை இதே நேரம் சந்திப்போம் கடற்கரையோரம்
என்று நீ சொன்னது இசைபோல் ஒலிக்கிறது
பார்வை தரும் போதை உடல் மீது உறசும்போது
தாழென்ன கதவுமே உடைகிறது

காப்பதும் சுகம் என்பேன்
கிடைத்தது வரம் என்பேன்
எனைச் சுற்றி இயக்கமெல்லாம்
உணராது உலவிடுவேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com