<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 07, 2004
 
# 142 உதயமாகும் வேளையில்
உதயமாகும் வேளையில் இருளும் ஏனம்மா?
என் இதயவாசல் திறந்த பின்னும் தனிமைக்கோலமா?

வானம் பார்க்கிறேன் ஏன் மழையை மறுக்கிறாய்? - என்
வாசல் காட்டினேன் ஏன் வருகை தவிற்க்கிறாய்

(உதயமாகும்...

வீணையை மீட்டினேன் அதில் நாதமாய் வருகிறாய்
ஓவியம் தீட்டினேன் அதில் உன் முகம் காட்டினாய்

கண்கள் மூடினால் என்
கனவில் தெரிகிறாய்
கனவை மூடினால் என்
நினைவில் நிறைகிறாய்

அமைதியைத் தேடும் நெஞ்சின் ஆழத்தில் துடிக்கிறாய்
என் அனுமதி இன்றியே எனை பறிமுதல் செய்கிறாய்

(உதயமாகும்...

நினைவுகள் அலைகளா உனக்கு பெளர்ணமி விழிகளா?
உணர்ச்சிகள் குழிகளா எனை செதுக்கிடும் உளிகளா?

நினைவுச் சோலையில் ஏன் ஞாபகார்த்தமாய்
உறைந்து கிடக்கிறாய் நீ வடிவம் வார்த்தையாய்?
கொதித்திடும் நெருப்பில் நீங்கிட காதல் நீராவியா?
என் ஒருவனை மட்டும் வாட்டும் காதல் நிரபராதியா?

(உதயமாகும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com