உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 07, 2004
# 141 நவீன நோய்
சோறும்,குழம்பும்,காயும்,கறியும்
சமைத்து தின்றது அந்த நாள்
இனிமேல் அது சாத்தியமா?
முயன்றவனும் பைத்தியமா?
செயற்கைச் சங்கிலி இழுக்கும் விலங்கினம்
ஆனோமே நாமும்
அங்காடியில் வாங்கி வந்து
அவசரமாய் உண்ணுகிறோம்
அட்டைப் பைகள் அரவனைத்த அறுஞ்சுவை உணவுவகை
உடலுக்குள்ளே இறங்கியதால் உண்டான கெடுதல் என்ன?
ஆராய்ச்சி ஆகுமா? அரசாங்கம் செய்யுமா?
ஆராய்ச்சி ஆகுமா? அதிலென்ன லாபமா?
முன்னேற்ற பாதை தேடி முட்டிமோதிப் போய்
வந்தாச்சு உப்பு, சக்கரை, பித்தம் மற்றும் ரத்த நோய்
தீர்க்கமாய் குனமடைந்திடவே
ஊர் வகை செய்திடவில்லை
வேகமாய் வாழ்கை சுழல்வதில்
ஓய்வில்லை
எல்லையில்லா தொல்லைகள் கண்டு
வில்லைகளாய் மாத்திரை இன்று
விரதமாய்த் தின்னல் உண்டு உணர்வாரோ?
இதுவரை ஆதார நோய்கள் வந்தும்
இதுவரை நோய் தீர்க்க செய்வாரேது?
ஆராய்ச்சி நடத்தக்காணோம்
அதிலென்ன லாபம் தேரும்?
