<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 07, 2004
 
# 140 வேறொரு விலாசத்தில்
வேறொரு விலாசத்தில்
உன் மனம் உரிமை கொண்டாடும்
பிறர் தோட்டத்து கனி தொடும்தூரத்தில்
புரிகின்றது எல்லை தெரிகின்றது

நதியும் நிலவில் குளிரும்
தப்பேது கூறு

(வேறொரு...

நான் உன்னை விரும்பும் காரணம் உலகறியாது

சூழல் மறந்து சிரிக்கின்றதை
ஆணின் சமமாய் நடக்கின்றதை
உணர்ச்சிகள் வெளிப்படை
அகம் புரம் ஒரே நிலை

உடன் பணிபுரியும் நான் அலைமோதினேன்

(வேறொரு...

ஆனவமே அறியா
தோரணையை ரசித்தேன்

எளியவரை நினைக்கும்
அனுசரனை மேலும் சொல்லப்போனால்
உன்னில் ஆகாதது என்று சொல்லப்போனால்
நீ வேறொருவன் மடியினில்,
பிடியினில், உறவினில், உயிரினில் சேர்வதைத்தானே வெறுக்கிறேன்

(வேறொரு...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com