<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, May 07, 2004
 
# 139 முகம் பார்த்திட
முகம் பார்த்திட நதி நோக்கும் மதி
மதி பார்த்ததும் நதி குளிர்கின்றதே
இது இயல்பானதே

மதியின் தேவை பிரதிபளிப்பாக
நதி நெஞ்சில் அது அன்பளிப்பாக
நிகழ்வுக்கும் விளைவுக்கும் இடையே...

விதி வரைவதே விபரீதம்
விளங்கிடாத ஓர் தீர்மானம்
கவனம் தவறும் கனப்பொழுதிலும்
காட்சி மாற்றிடும் ஒரு மாயை

(முகம்...

ஆதரவென உள்ளம் தேடிடுதே ஒரு துளி நம்பிக்கை
மேலொருவன் நம்மைக் காப்பது போன்ற சிந்திப்பை
மதமா துணை சுயபலமா? தெரிவதனால் சுமை குறைவா?
புரிந்திட பலனென்ன புலப்படுமா?
ஞானமே வெறுமை என்றால் யார் தேடுவார்?

உறவு உணர்வுக்கு வறுமை
அது உன்னில் உனைக் குறைக்கும் திறமை
உன்னை நீங்காது தனிமை
இதுதான் உண்மை நிலைமை
யார் தோன்றிட யார் மறைகிறார்?
யாரோ இயற்றிட யாரோ இயங்கிட?
வாழ்வின் வரைபடம் யார் அறிவார்?

(முகம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com