<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 06, 2004
 
# 138 துணைவியே
உதிராத பூவை சிதராமல் கோதி உறவாடும் தென்றல் மென்மை
உனைக் கண்ட நெஞ்சில் உருவானதென்ன உனைப் போல இல்லை பெண்மை

உன் அருமை பேசிடவே உவமைகள் ஏழையடி
என் வாழ்வின் வெற்றியெலாம் நீ சகித்த இடிகளடி

உன் ஆழம் நீ அறிந்த உள்ளார்ந்த பெருமிதம்,
இது என்ன பெரிது என்ற அனுபவ நிதானம்,
சோதனையே வாழ்க்கையெனும் ரகசியம் அறிந்தும்
சிரித்திட சந்தர்ப்பம் தேடும் சூட்சமம்

சுவைகளைவிட சுமைகளையே அதிகம் தந்தும்
நிறைகுடமாய் எனை நடத்தும் புனிதமே உனைப் போற்றி
அன்றாடம் இதய மேட்டில்
ஆசை வரிகள் ஆயிரம் ஆயிரம்

வாய்பேசாவிடினும் இவ்வரிகளை
விழி கசிந்துவிடும் வாங்கிக்கொள்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com