<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 06, 2004
 
# 137 கொடும்பாவி
வெற்றிலையிலும் வெள்ளைச் சாயம்
சிகப்பு சிந்திப் போனது
கறுப்பு மண்ணில் வெள்ளை சேர்ந்தும்
இதே தீர்ப்பு ஆனது

வெள்ளைக்குள்ளே ரத்த தாகம்
வைத்த தேவன் சதியிலே
வெள்ளைக் கொடியின் சமரசமும்
கறுப்புக் கொடியின் கண்டனமும்
நிலைமாறிப் போனதே
தென்னவர்கள் விதியிலே

ஆற்பறிக்கத்தான் வைத்தாயோ
ஆப்பிரிக்கா தேசத்தை?
நிற வெறிக்கு உன் அவதாரம்
எங்கே சொல் நீலகண்டனே!

வியர்வை சிந்தி வனம் வளர்த்தும்
முட்களே முளைத்தன
பிற நாடுகள் புறக்கணிக்க
பினங்களே குவிந்தன

நிறங்களின் சதுரங்கம்
ஒரு பக்கம் சார்ந்ததே
இருதரப்பிலும் வெள்ளாட்ச்சி
இறப்பதென்னவோ கறுப்புத்தான்

வேளி மேய்ந்த பயிரிலே
மாய்ந்த மனிதாபிமானம்
மண்டெலாவின் மான்பிலே
உயிர்பித்தது ஓரளவு

சுற்றுலகம் கைகட்டி நிற்பதனால்
சூரையாடல் இன்னும் நடக்கிறது
அயல் நாடுகள் வந்து குளிர்காய
ஒரு கண்டமே கொடும்பாவி எரிகிறது

வறுமைக் கோடு
இவர் வாழ்க்கைப்பாடு
இங்கு வயோதிகம் காண்பது
வெள்ளையர் மட்டுமே
சிகையில் கூட வெள்ளை சேர்க்கா
வைராக்கியமாய் இருக்குமோ?

நிறங்கள் மறைந்தால் வெள்ளை
இது நியதி
மனித நிறங்களும் இதே கதியோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com