<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 06, 2004
 
# 136 கறுமைக் கவிதை
வெண்தாள் போன்ற வெறுமையில் கறுமைக் கவிதை அவளே
வண்ணமாய் வானவில் வளைய பொழியும் மழைமேகம் அவளே
வெறுமையின் நிறம் வெண்மை, இனிக்கும் கறும்புத் தோல் அவளே
வெளிச்சம் நறைத்து ஞானம் கொண்ட கறுமைப் பதுமை அவளே

நான் படித்த தமிழின் நிறம் கறுப்பு
சிந்தனையில் கண்மூட வரும் கறுப்பு

காணும் கனவெல்லாம் கண் நிறைய
எல்லைக் கோடாகும் மை அவளே
நிஜத்தை அரிதாரம் பூசிடலாம்
நிழலின் நிறம்கொண்ட மெய் அவளே

விண்மீண்களை மிளிர வைக்கும் வெளி கறுப்பு
சூரியகாந்தியின் விழி கறுப்பு
சூரியன் குடித்திடும் உடல் கறுப்பு
இளரத்தம் பயிரிட்ட முடி கறுப்பு

இயக்கத்தின் அடிப்படை நிலை கறுப்பு
எரிந்தபின் எல்லாமும் நிறம் கறுப்பு
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com