உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 06, 2004
# 134 பிறியாவிடை
விடியலில் ஒன்றும் மாற்றமில்லை
காலம் கடமையை விடவில்லை
வாசலில் மடித்த செய்தித்தாள்,
கதவருகே உன் கறுப்புக்குடை,
காணாதிருப்பது உன்னைத்தான்
எங்கே எங்கே என் கண்மணி?
காலணிகூட வைத்த இடத்தில்
வைத்தபடி இருக்கிறது
குழந்தை உறங்கும் சீலைத் தொட்டில்
உன் அரவம் தேடிச் சினுங்கிடுது
என்னைச் சுற்றி இயக்கமெல்லாம்
என்றும்போல நடக்கிறது
நீயில்லாத இல்லம் மட்டும்
வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே எங்கே என் கண்மணி?
Comments:
Post a Comment
