<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, May 06, 2004
 
# 132 இளமுல்லைப் பூவே
இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
நிகழும் கனாவே
விளங்கா வினாவே

மடிமீது வந்து
தவழும் நிலாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே

மன்மதனின் தோட்டம் விதவிதமாய்ப் பூத்தும்
கதிர் உன்னை மட்டும் அடையாளம் பார்க்கும்
கடிகார முள்ளும் உனைக் கண்டு பூக்கும்
கதிராடை உன்னால் புது கர்வம் காட்டும்

மடிமீது வந்து
தவழும் நிலாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே

தேவர்களின் பின்னே ஒளி வளையம் போலே
என் பார்வைக்கென்றும் உன்னுருவம் பெண்ணே
அதரத்தைப் பார்த்து உதிரத்தில் வேகம்
என் நெஞ்சும் கொஞ்சம் பலவீனம் ஆகும்

நிகழும் கனாவே
விளங்கா வினாவே

இளமுல்லைப் பூவே
எனை வென்ற பூவே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com