<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 130 நடுவிரல்
ஆசைக் கடலில் அனுப்பிவைத்து
மூழ்கடிக்க நினைத்தாயே
நயவஞ்சகனே வாங்கிக்கொள்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

கருணை இல்லப் பாதிரியாய்
குழந்தைக் கனவைக் கெடுத்தாயே
கடவுள் போர்வையில் களவாடும்
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

சுதந்திர நாட்டை சீர்குளைத்து
கொடியவரை ஆள வைத்து
கொத்தடிமைகள் மக்கள் என்ற
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்

வடக்கில் என்றும் வெள்ளமிட்டு
தெற்கில் என்றும் பஞ்சமிட்டு
இரண்டும் அழியச் செய்தாயே
உன் படைப்பிற்கு ஒரு நடுவிரல்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com