<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 129 குரலரசி சுசீலாவுக்கு என் காணிக்கை
நாபிக் கமலத்திலிருந்து வரும் நளின அருவியே
உணர்ச்சிக் காற்றை வருடும் புணர்ச்சிப் பறவையே
விளம்பரம் தேடாத விதானமே
நிலைமை தளரா நிதானமே

நீ மழைச் சாரலில் வீணை நாதம்
அதிகாலையில் சுப்ரபாதம்
ஓடைக்கரையில் குழலோசை

கலைவாணியின் செல்ல மகள்
தென்றலுக்கு சொந்தக்காரி
தமிழிசையின் ஆயுள் நாடி

உன் குரலை வடித்திசைக் கருவி செய்ய கலைஞன் இல்லையே
நீ பாடியதெல்லாம் சேகரிக்க யோகம் இல்லையே

நீ ஏழை வீட்டில் இலவச விருந்து
அனாதையைத் தாலாட்டும்
ஆதரவு அன்னை
அர்த்தமும் இசையும் கூடும் கடல்

என் உதிரத்தை உறித்து
ஒரு காணிக்கை மலரை
செய்ய முடிந்தால்
அது உன் காலடியில்

அதுவரையில் இதை ஏற்றுக்கொள்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com