<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 128 நாயணம்
நாயணம்
அது வாரிச் சென்றது
கோவில் சென்ற என் மனதை

இதுபோல் இசை சாத்தியம்தானா?
இசைத்ததுமே வாத்தியம்தானா?
காலத் தடயம் போக்கும் ஞானம் கொண்ட நாயணம்

பிரயோகம் கோவிலிலா?
அது தவிர மேடையிலா?

மேன்மை என்று தனித்ததாலே
பலதரப்பில் பயில மறுத்தார் சோகமே
எத்தனை வகையாய் கருவிகள் கேட்டோம்
உலகெங்கும் இதுபோல் இல்லை ஓசையே

நாள்போக்கில் மாறுமா? உதவாமல் நேருமா?
ஊதுங்கள் நாயணம், உயரட்டும் நாதமும்

முடங்கிப்போய் மூழ்கலாகாது கல்வெட்டுப்போல் காப்போம் நாளும்

நாயணம்
விண்ணில் முழங்கிடும் பேரிகை
நெஞ்சில் எழுந்திடும் போர்குரல்
துஞ்சுநிலைக்கொரு பூங்குரல்

சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப
சாகசமாய் இசை சேர்க்கும்
நவரசமும் நாயணம் சொட்டக் கேளுங்கள்

உயர்கலை என்று சொல்லி ஆனதேது?
புழக்கத்தில் இன்று நாளை சேர்ந்திடாது
இனிவரும்
எந்த காலகட்டத்தின் இசையிலும்
தொன்றுதொட்ட நாயணமும் சேரட்டும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com