உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
# 127 கலை சாகக் காரணம்
கலை சாகக் காரணம்
கல்வி அதில் சேர்வதில்லை
கை ஏந்திப் பிழைக்கவே
கற்கிறோம் பொய்யில்லை
சந்தர்ப்ப சூழ்நிலை
யாரைச் சேருதோ, அவர்
சரித்திர புருஷராய்
கோலோச்சும் காலமிது
அடிபனிந்த காரணமே
அரசியலும் அழிகிறது
அன்றாடம் காய்ச்சிகளாய்
ஆக்கிவிட்டு ஏய்க்கிறது
கலையென்றும் காட்சியென்றும்
தேர்ந்தெடுத்த ஆட்சியென்றும்
மூடருக்கு மாலையிட்டு
மேடையேற்றி நாம் சரிந்தோம்
ஊருக்கு நூருபேர்
உணர்வுடன் புறப்படாது
கீழ்த்தரமானவரை
களையெடுக்கு முடியாது
புரட்சியின்றி பொற்காலம்
பிறந்ததில்லை எப்பொழுதும்
நிலவையும் பொறி தட்டி
நீக்கிடுவோம் இந்த இருள்!
Comments:
Post a Comment
