<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 125 இருட்டரைக்குள் தீபம்
இருட்டரைக்குள் தீபம்
இசை ஒலித்திட ஆடும்

கற்ற வித்தை கையில் சீறும்
பற்ற வைத்த நெஞ்சம் சேரும்

உறங்கிட வரவில்லை
உடல் மனமெங்கும் தொல்லை

மது அருந்திட நாழி
விரைந்தோடுமென்று கேள்வி, தோழி

கையில் பெட்டி தோளில் வாத்தியம்
ரயில் சென்றும் நான் காத்திருந்தேன்
அகப்பட்டதங்கு நீயோ?
ஆசைமோசமிங்கு நானோ?

விடைபெரும் கடிதத்தை
வீட்டில் படித்திருப்பாரே
எந்த முகத்துடன் நானும்
எந்தன் வீட்டுப்படி ஏற?

விட்டுச்செல்லும் உறுதி
சேரும் இடமதில் இல்லை
நிழல் துறந்தவனை
ஒளி மறந்தது இல்லை
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com