<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 124 சந்தனப் பூச்சு போல்
பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே

ஆண்:
உல்லாசம்...ம்ம்க்ம்ம்ம்...உல்லாசம்...

பெண்:
சந்தனப் பூச்சு போல்
என் உள்ளம்
சிலிர்த்ததே மெல்ல,இசைமழையிலே விரல்கள் மேகமே

ஆண்:
உன் கண்களே விழா கோலம்
உன் பார்வையோ கார்த்திகை தீபம்
உன் பார்வையில் காய்ந்து இசையில் நனைகிறேன்

இன்பத்திலே இசையே சிகரம்
துன்பத்திலும் அதுதான் நிகரம்
எனை இன்பமாக்கியே துன்பம் தீர்க்க வா

பெண்:
வானம்வரை சேரும் கீதம்
வார்த்தைகளை மீறும் நாதம்
மனவானில் என்றும் கீதம் நீ

என் கைவரைந்த காதல் வரி
உன் வாய்மொழிந்த குழல் அருவி
உரையாடல் கூட இசையின் மொழி
உன் உறவுப் போர்வையில் குளிர் காயவா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com