<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 123 பனித்திரை
பனித்திரை பூங்காவனத்தை
பாதுகாத்திட மறைத்ததோ?
ஓடையும் வெப்பம் தேடி
மாலையில் விரைந்ததோ?

பதுங்கி கொண்ட பாறை மலைகள்,
புகைபிடிக்கும் ஏரிக்கரைகள்,
மலைக்குமேல் சொர்கப் பரிசை
வைத்ததெல்லாம் யார் கைவரிசை?

காதலர்கள் மயங்கிட
ஓடங்களும் ஏரியில் மிதக்க
கைகோர்த்த ஜோடி பல
கரையெங்கும் சுற்றி நடக்க
காண்பதெல்லாம் காதலர் கனவோ?
இயற்கைக்கும் காதலர் மனதோ?
உயரத்தில் செல்லச் செல்லவே

வழக்கத்திற்கு விடுமுரை
கோடைகாலம், வேண்டும் விடுதலை
வேலை விட்டு விலகியே
தேடிப்போனோம், நாமும் அமைதியை
கவலை விட்டுப் போகவே
இயற்கை தொட்டில் ஆட்டுமே
உயரத்தில் செல்லச் செல்லவே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com